Tuesday, August 4, 2009

பௌணர்மி

இவள் நடந்தாலே
எங்கும்
முத்துக்கள் தெறிக்கின்றன
யாரது துணிவிரித்து அள்ள
முயலுவது முகில்களோ
ராக்கெட்டுக்களை வீசுவது
வால்மீன்களோ
மெல்ல மெல்ல நடை பயிலுவதைப்
பார்த்து இடி ஆனந்தக் கூச்சலிடுகின்றதோ
யார் திருஷ்டிப்பட்டதோ
இவள் கன்னத்தில் கரும்படலம் !!

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனங்களை இங்கே விதைக்கலாம் !